அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

நீடாமங்கலத்தில் இருந்து ஓசூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர்

நீடாமங்கலம்;

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மற்றும் இடையர்நத்தம், மூவாநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் எடை கொண்ட நெல் மூட்டைகள் 158 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நெல் அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story