நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
x

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

பெரம்பலூர்

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளில் நெல் சாகுபடி அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அறுவடை செய்யப்படும் நெல்லை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதோடு, பல்வேறு மோசடிகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், தங்கள் பகுதிகளில் விளையும் நெல்மணிகளை தமிழக அரசின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பல்வேறு கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதன்படி பள்ளகாளிங்கராய நல்லூரில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.


Next Story