அமராவதி பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.


அமராவதி பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
x

அமராவதி பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

திருப்பூர்

தளி,

paddy

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மழையால் அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டினார்கள். அதைத் தொடர்ந்து அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்தது. மேலும் வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்து விவசாயிகளுக்கு உதவியது. இதன் காரணமாக அணை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முழு கொள்ளளவில் அணையின் நீர்மட்டம் நீடித்து வருகிறது.

நெற்பயிர்கள்

இந்த சூழலில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பருவமழை காலங்களில் அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்து வருகின்றோம். பயிர்களும் நோய் தாக்குதலில் இருந்து தப்பித்து நல்ல முறையில் வளர்ந்து அறுவடையை எட்டி உள்ளது. ஆனால் அறுவடைக்கு பின்னிட்ட பராமரிப்பு பணிகளில் ஆண்டுதோறும் தடங்கல்களை சந்தித்து வருகிறோம்.குறிப்பாக உலர்கள வசதி இல்லாதது, விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படாதது, இடைத்தரகர்கள் ஆதிக்கம் என விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது.

இந்த முறை நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து விளைச்சலை அளிக்கவுள்ளது மன நிறைவை தருகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நெல்மணிகளை உலர வைப்பதற்கு உளர்கள வசதி செய்து தருவதுடன் நெல்மணிகளை நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 89.18அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

---

அமராவதி பகுதியில் அறுவடைக்கு தயாராக விளைந்து கிடக்கும் நெற்கதிர்கள்.


Next Story