நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல்


நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு   அரவைக்காக ஆயிரம் டன் நெல்
x
தினத்தந்தி 8 Nov 2022 7:15 PM GMT (Updated: 8 Nov 2022 7:16 PM GMT)

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக ஆயிரம் டன் நெல் திருச்சிக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், தெற்குநத்தம், இடையர்நத்தம், மூவாநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட ஆயிரம் டன் பொதுரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் அரவைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story