அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்
பேரளத்தில் இருந்து திருவள்ளூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு நன்னிலம், வலங்கைமான், குடவாசல், திருவாரூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்ட சன்னரக நெல் லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுதது நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் 57 வேகன்களில் அடுக்கி வைத்தனர். அதன் பின்னர் சரக்கு ரெயில் திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story