அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம்:-

நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்லை சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதையொட்டி பாமணி, ராஜகோபாலபுரம், அரவத்தூர், மூவாநல்லூர், ஆதனூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளிசேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் நெல், நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 58 வேகன்களில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் தர்மபுரி புறப்பட்டு சென்றது.

1 More update

Next Story