நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி தாலுகாக்களில் இயங்கி வரும் அரசுநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் பாமணி மத்திய சேமிப்புக்கிடங்கு, அசேஷம், தெற்குநத்தம், இடையர்நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் அரவைக்காக தர்மபுரி அனுப்பி வைக்கப்பட்டது.

1 More update

Next Story