அரவைக்காக 1,000 டன் நெல்


அரவைக்காக 1,000 டன் நெல்
x
தினத்தந்தி 30 Oct 2022 7:00 PM GMT (Updated: 30 Oct 2022 7:00 PM GMT)

அரவைக்காக 1,000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து சேலத்துக்கு அரவைக்காக 1,000 டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் சன்னரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத்தொடர்ந்து நெல் அரவைக்காக சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story