மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டர் கைது


மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டர் கைது
x

பொள்ளாச்சியில் குடும்பம் நடத்த வராததால் மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் குடும்பம் நடத்த வராததால் மனைவியை குத்திக்கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டி.கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 34). பெயிண்டர். இவரது மனைவி கவிதா(25). அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையில் சுரேஷ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால், குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவிதா கோபித்துக்கொண்டு மரப்பேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று அங்கு சென்ற சுரேஷ், குடும்ப நடத்த வருமாறு கவிதாவை அழைத்தார். ஆனால் அவர், வர முடியாது என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் இன்று மீண்டும் அங்கு சென்று, கவிதாவிடம் தனது வீட்டிற்கு வருமாறு கேட்டார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவிதாவின் நெஞ்சு பகுதியில் குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கைது

இதுகுறித்த புகாரின்பேரில் மகாலிங்கபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவருக்கும், கவிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதோடு தன்னுடன் குடும்பம் நடத்த வராததால் சுரேஷ் கொலையை அரங்கேற்றியதும் தெரியவந்தது. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story