பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை


பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

குலசேகரம் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை, மண்ணாரங்கோடு காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது32), பெயிண்டர். இவருக்கு அபிநயா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக குலசேகரம் அருகே உள்ள கூடைதூக்கி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ராஜேசுக்கு கடன் தொல்லை இருந்ததாக தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் அபிநயா, குழந்தைகளுடன் மண்ணாரங்கோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அதன்பின்பு வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அபிநயாவுக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த அபிநயா விரைந்து வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story