பெயிண்டர் சாவு


பெயிண்டர் சாவு
x

பெயிண்டர் சாவு

கோயம்புத்தூர்

கோவை

கோவை குனியமுத்தூர் வெற்றிலைக்கார வீதியை சேர்ந்தவர் காஜா உசேன் (38). திருமணமாகாதவர். பிளாட்பாரத்தில் தங்கி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், செல்வபுரம் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே காஜா உசேன் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்த விவரம் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அதிக மது போதையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story