மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு


மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
x

வடலூரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் உயிாிழந்தாா்.

கடலூர்

வடலூர்,

வடலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் பிரான்சிஸ் (வயது 28). பெயிண்டர். இவர் வடலூரில் கும்பகோணம் சாலையில் உள்ள, ஒரு தனியார் பள்ளியின் மேல்பகுதியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகே சென்ற மின்கம்பியின் மீது பிரான்சிஸ்சின் கை பட்டதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வடலூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரான்சிஸ்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story