நாமக்கல்லில்ரெயில் மோதி பெயிண்டர் சாவு


நாமக்கல்லில்ரெயில் மோதி பெயிண்டர் சாவு
x
நாமக்கல்

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நடராஜபுரம் 4-வது வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது38). இவர் லாரி பட்டறையில் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அப்போது முதலே சுரேஷ்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவர் துறையூர் ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார், சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story