மார்த்தாண்டம் அருகேகுளக்கரையில் பெயிண்டர் பிணம் மீட்பு


மார்த்தாண்டம் அருகேகுளக்கரையில் பெயிண்டர் பிணம் மீட்பு
x

மார்த்தாண்டம் அருகே குளக்கரையில் பெயிண்டர் பிணமாக கிடந்தார். அந்த உடலை மீட்ட போலீசார் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே குளக்கரையில் பெயிண்டர் பிணமாக கிடந்தார். அந்த உடலை மீட்ட போலீசார் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெயிண்டர் மாயம்

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் வசித்தவர் ரமேஷ் (வயது 48), பெயிண்டர். இவருடைய மனைவி சுஜிகலா. இவர்களுடைய மகன் ராகுல்ராஜன். ரமேஷ் தினமும் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்ற ரமேஷ் 2 நாட்களாக வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

குளக்கரையில் பிணம்

இந்தநிலையில் நேற்று காலையில் உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஆலுமூட்டு குளத்தின் கரையில் ரமேஷ் பிணமாக கிடந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்து இருந்தது.

இதுபற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் குளக்கரைக்கு விரைந்து சென்று ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story