பள்ளிபாளையத்தில், மதுபோதையில் சுவர் ஏறி குதித்தபோது தவறி விழுந்து வாலிபர் பலி


பள்ளிபாளையத்தில், மதுபோதையில்  சுவர் ஏறி குதித்தபோது தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:45 PM GMT)

பள்ளிபாளையத்தில், மதுபோதையில் சுவர் ஏறி குதித்தபோது தவறி விழுந்து வாலிபர் பலி

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தில் மதுபோதையில் சுற்றுச்சுவர் ஏறி குதித்தபோது தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

திருமணமாகவில்லை

பள்ளிபாளையம் தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). தொழிலாளி. இவருடைய மகன் ரஞ்சித்குமார் (28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ரஞ்சித்குமார் தனது தந்தையுடன் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்ற ரஞ்சித்குமார் பின்னர் வீட்டுக்கு குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிக போதையில் இருந்த அவர் திடீரென வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறினார்.

விசாரணை

இதையடுத்து சுவரில் இருந்து மறுபுறம் குதிக்க முயன்று தவறி விழுந்ததில் அவருக்கு பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் மயங்கி விட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை அக்கம் பக்கத்தினர் ரஞ்சித்குமார் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரஞ்சித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story