வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு


வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு
x

பள்ளுர் வராகி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலியை அடுத்த பள்ளுர் கிராமத்தில் உள்ள வராகி அம்மன் கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் நெய், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. காலை முதலே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த வழிப்பாட்டில் சென்னை, பெங்களூரு, காஞ்சீபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

1 More update

Next Story