பஞ்சாயத்து தலைவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


பஞ்சாயத்து தலைவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x

விருதுநகரில் பஞ்சாயத்து தலைவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் கிழவனேரி பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் கார்த்திக் (வயது 31). இவரது மனைவி முனீஸ்வரி. இந்தநிலையில் கார்த்திக், காரியாபட்டியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் முனீஸ்வரி காரியாபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கார்த்திக்கின் உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பஞ்சாயத்து தலைவர் கார்த்திக்கின் உறவினர்கள் கார்த்திக்கின் சாவில் மர்மம் உள்ளது என்றும் அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கார்த்திக்கின் உடலை வாங்காமல் அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story