பஞ்சாயத்து புதிய கட்டிடம் திறப்பு விழா


பஞ்சாயத்து புதிய கட்டிடம் திறப்பு விழா
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சேர்ந்தமரம் பகுதியில் பஞ்சாயத்து புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சேர்ந்தமரம் மஜரா ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் திருமலாபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேலநீலிநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், சேர்ந்தமரம் மஜரா ஊராட்சி மன்ற தலைவர் செண்பக்கனி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முடிவில், ஊராட்சி செயலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.


1 More update

Next Story