திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா


திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா
x

திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுேதாறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விநாயகர் மற்றும் பஞ்ச மூர்த்திகள் சிறிய தேரில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குனி உத்திர பெருவிழா குழு தலைவர் வக்கீல் ஜெயக்குமார், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சாமி வீதி உலா நடக்கிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி காலை கோவிலில் இருந்து விநாயகர், அக்னீஸ்வரர், சோமாஸ்கந்தர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் மலர் அலங்காரத்துடன் கோவிலிலிருந்து கோபுர தரிசனம் கண்டு பல்வேறு இசை நிகழ்ச்சிகளுடன் திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்துவேலி வீதிகளில் உலா வரும். மாலை பஞ்சமூர்த்திகளும் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் எழுந்தருள செய்து மகா அபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்குனி உத்திர பெருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story