பரவையில் பயங்கரம்: சோழவந்தானில் துக்க வீட்டில் இருதரப்பினர் மோதல்; வாலிபர் படுகொலை


பரவையில் பயங்கரம்: சோழவந்தானில் துக்க வீட்டில் இருதரப்பினர் மோதல்;  வாலிபர் படுகொலை
x

பரவையில் துக்க வீட்டில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை

வாடிப்பட்டி

பரவையில் துக்க வீட்டில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

கோஷ்டி மோதல்

மதுரை மாவட்டம் பரவை மந்தை பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது 65). இவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். இதை தொடர்ந்து அவரது வீட்டின் முன் பந்தல் அமைத்து உறவினர்கள் ஒன்று கூடி அமர்ந்திருந்தனர்.

அப்போது பரவை கம்பர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் வெங்கடேசன் (25) என்பவர் தனது நண்பர்களுடன் அந்த வழியாக வந்தார். அப்போது முன்பகை காரணமாக கோபாலின் பேரன் லாலுவுக்கும் வெங்கடேசனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அது கைகலப்பானதில் லாலின் உறவினர்களும் வெங்கடேசன் நண்பர்களும் கோஷ்டியாக மோதிக் கொண்டனர்.

கத்தியால் குத்திக்கொலை

அப்போது எதிர்பாராத விதமாக வெங்கடேசனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கத்தியால் குத்தியது யார்? என்று விசாரித்து வருகிறார்கள். துக்க வீட்டில் இருதரப்பினர் மோதலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story