பறையர் பாதுகாப்பு பேரவை ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பறையர் பாதுகாப்பு பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தமிழகத்தில் நடைபெறும் சாதிய படுகொலைகளை தடுக்கக் கோரி தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர இளைஞரணிச் செயலர் சந்தனராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலர் மாடசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலர் பிரசாத், மாவட்ட துணைச் செயலர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் தலைவர் இளவரச பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சாதிய படுகொலைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பேரவை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் உரிய அனுமதியின்றி நடந்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story