விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய கிளி, நாக்கண்டம் மீன்கள்


விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய கிளி, நாக்கண்டம் மீன்கள்
x

குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் கிளி, நாக்கண்டம் மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

கன்னியாகுமரி

குகுளச்சல்,

குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் கிளி, நாக்கண்டம் மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

விசைப்படகு மீனவர்கள்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவார்கள். இவர்களது வலையில் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் சிக்கியிருக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கண்டம் போன்ற மீன்கள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.

இந்தநிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 45 படகுகள் நேற்று கரை திரும்பின. நாள் ஒன்றுக்கு 20 படகுகள் என்ற டோக்கன் முறையில் விசைப்படகுகளில் இருந்து மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றில் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் அதிக அளவு இருந்தன.

குவித்து வைத்து ஏலம்

அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து ஏலமிட்டனர். ஒரு கிலோ கிளி மீன்கள் ரூ.105-க்கு விலை போனது. கடந்த நாட்களில் கிளிமீன் கிலோ ரூ.80-க்கு விலை போனது குறிப்பிடத்தக்கது. சின்ன கிளிமீன் கிலோ ரூ.80 முதல் ரூ.85 வரையும், நாக்கண்டம் கிலோ ரூ.40-க்கும் ஏலம் போனது. இதுபோல் தோட்டு கணவாய் கிலோ ரூ.385-க்கும், ஓலக்கணவாய் ரூ.240-க்கும், ஸ்குட் கணவாய் ரூ.415-க்கும், நிப்புள் கணவாய் ரூ.180-க்கும் விலை போனது. கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண்டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர்.


Next Story