சேதமடைந்த நிழற்குடையால் பயணிகள் அவதி


சேதமடைந்த நிழற்குடையால் பயணிகள் அவதி
x

ராஜபாளையத்தில் சேதமடைந்த நிழற்குைடயால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் சேதமடைந்த நிழற்குைடயால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

பயணிகள் நிழற்குடை

ராஜபாளையம் நகரில் தென்காசி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பி.எஸ்.கே. பார்க் நிறுத்தம், காந்தி சிலை ரவுண்டானா கீழ்புறம், டி.பி. மில் சாலை, சொக்கர் கோவில் எதிரில், யூனியன் அலுவலகம் என பல இடங்களில் நிழற்குடைகள் உள்ளது.

இந்த நிழற்குடைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு நிழற்குடைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. இங்குள்ள ஒரு நிழற்குடையில் பேனர் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

மேலும் நிழற்குடையின் அருகில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

ஒரு சில நிழற்குடைகளின் தூண்கள் சேதம் அடைந்து, உள்பக்கம் மண் மேவி காணப்படுகிறது. சில நிழற்குடைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் இடிந்து கீழே விழுந்து விடுமோ என பயணிகள் அச்சப்படுகின்றனர். ஒரு சிலர் நிழற்குடையை பயன்படுத்துவதையே தவிர்த்து வருகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடையில் உள்ள சேதமடைந்த இருக்கைளை சீரமைக்கவும், தெரு விளக்குகள் பொருத்தி நிழற்குடையை முழுவதுமாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story