அரசு மருத்துவமனைக்கு முககவசம் அணிந்து வந்த நோயாளிகள்


அரசு மருத்துவமனைக்கு முககவசம் அணிந்து வந்த நோயாளிகள்
x

அரசு மருத்துவமனைக்கு முககவசம் அணிந்து நோயாளிகள் வந்தனர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

நாட்டில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் டாக்டர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் மற்றும் உடன் வந்தவர்களில் பலர் முக கவசம் அணிந்து வந்தனர். சிலர் முக கவசம் அணியவில்லை. கட்டாயம் முககவசம் அணிந்தால் மட்டுமே நோய் ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவமனையின் டீன் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story