தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு


தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
x

தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. கவுன்சிலர் கோரிக்கை மனு கொடுத்தார்.

தேனி

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்துக்கு 13-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் ஆனந்தி விஜயகுமார் தலைமையில் பா.ஜ.க.வினர் வந்தனர். நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமாரிடம், அவர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், "நகராட்சியில் தற்போது சுமார் 100 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். நகராட்சி பரப்பளவை பார்க்கும் போது இது குறைவான எண்ணிக்கையே. தூய்மை பணியாளர்களுக்கு தற்போது ஒருநாள் ஊதியமாக ரூ.260 வழங்கப்படுகிறது. அவர்களின் பணிக்கு இதுபோதுமானதாக இருக்காது. மாவட்ட கலெக்டர் அறிவித்த அறிக்கையில், தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.510 ஊதியமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிந்தேன். எனவே தற்போதைய ஒப்பந்ததாரரின் நடைமுறையை நிறுத்திவிட்டு, புதிதாக ஒப்பந்தபுள்ளி கோரி, தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க, வருகிற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார்.


Next Story