மின்சாரம் தாக்கி மயில் சாவு


மின்சாரம் தாக்கி மயில் சாவு
x

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே பட்டன்கல்லூர் பகுதியில் வேளாங்கண்ணி மாதா கெபி உள்ளது. அதன் அருகே மின்கம்பத்தை ஒட்டியவாறு ஆண் மயில் ஒன்று நேற்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மயில் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. இறந்த மயிலை பரிசோதனைக்காக வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

1 More update

Next Story