மின்சாரம் தாக்கி மயில் சாவு

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.
பேட்டை:
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே பட்டன்கல்லூர் பகுதியில் வேளாங்கண்ணி மாதா கெபி உள்ளது. அதன் அருகே மின்கம்பத்தை ஒட்டியவாறு ஆண் மயில் ஒன்று நேற்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மயில் மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. இறந்த மயிலை பரிசோதனைக்காக வனத்துறையினர் எடுத்து சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





