புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர்களுக்கு அபராதம்


புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர்களுக்கு அபராதம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா சூலக்கல் பகுதியில் பள்ளி, கோவில் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை விற்பனை செய்யப்படுவதாக நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ராவுக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று சூலக்கல் பகுதியில் சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல், மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், இன்பரசன், ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் பெட்டி கடைகள், பேக்கரிகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பெட்டிக்கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை விற்பனை செய்ததும், கடைகள் முன்பு புகைப்பிடிக்க அனுமதி அளித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் 6 கடை வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

1 More update

Next Story