ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். அவரிடம் ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் 39 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. 23 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 16 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ஓய்வூதியர்களுக்கு நிலுவைத்தொகை மற்றும் ஓய்வூதிய தொகை போன்றவற்றை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த துறைகளில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட கருவூல அலுவலர் சாரா மார்க்ரெட், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story