சூரியகாந்தி மலர்களுக்காக தென்காசிக்கு படையெடுக்கும் மக்கள்..!


சூரியகாந்தி மலர்களுக்காக தென்காசிக்கு படையெடுக்கும் மக்கள்..!
x

கோப்புப்படம் 

சூரியகாந்தி மலர்களை பார்ப்பதற்காக மக்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் பகுதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலரை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

கடையநல்லூர் அடுத்த சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய காந்தி மலர்கள் பயிடப்பட்டுள்ளது. இந்த மலர்களை காண சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர்.

இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அதே இடத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.


Next Story