கோவிலில் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி


கோவிலில் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
x
தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 3:12 AM GMT)

விருத்தாசலத்தில் கோவிலில் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் சந்தை தோப்பில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை திருட முயன்றார். இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது கோவில் கருவறை கதவின் பூட்டை உடைத்துக்கொண்டிருந்த மர்ம நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே பொதுமக்களும் விடாமல் பின்னால் துரத்தி சென்று மர்மநபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சிதம்பரத்தை சேர்ந்த மணி என்பது தொியவந்தது. விசாணைக்கு பிறகு அந்த நபரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கோவிலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story