ஆழியாற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது


ஆழியாற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது
x

ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே ஆழியாற்றுக்கு பொதுமக்கள் குளிக்க செல்ல கூடாது என்று வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே ஆழியாற்றுக்கு பொதுமக்கள் குளிக்க செல்ல கூடாது என்று வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிக ளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

இதேபோல் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆழியாறு அணையில் இருந்து நேற்று 3-வது நாளாக உபரிநீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,364 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2540 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. புதிய ஆயக்கட்டு கால்வாய் வழியாக தடுப் பணைகளுக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கரைபுரண்டு ஓடுகிறது

அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆழியாற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே ஆழியாற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல கூடாது. இது போல் கால்நடைகளையும் ஆற்று பகுதிக்கு அழைத்து செல்ல கூடாது.

இதற்கிடையே அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றுக்கு செல்வது, தண்ணீர் ஓடும் தரைப் பாலத்தை கடந்து செல்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.


Next Story