சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் அவதி


சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் அவதி
x

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி பகுதியில் செயல்படும் ஓட்டல்களில் உள்ள கழிவுகள் மற்றும் இறைச்சி கடை கழிவுகளை ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் கொட்டாமல் கொட்டாம்பட்டி-நத்தம் பிரிவு சாலையில் சாலையோரத்தில் கொட்டுவதால் அந்தபகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் தினந்தோறும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல் கருங்காலக்குடி நான்கு வழி பிரிவு சாலை பகுதியிலும் குப்பைகளை சாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது குப்பைகள் விழுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கிய இடத்தில் கழிவுகளை கொட்டாமல் விதிகளை மீறி சாலையோரம் கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story