மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜன் கலந்துகொண்டு பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த ரூ.500 உதவித்தொகையை சேர்த்து வழங்கப்படாமல் உள்ளது. இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்க முக்கிய நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் மகாபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் நிர்வாகிகள் கோவிந்தசாமி, பாரதிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story