போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம்
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

முகாமில் பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் அளித்த புகார் மனுக்களில் போலீஸ் நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 58 மனுக்களில் 53 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது.

மேலும் நிலுவையில் உள்ள 5 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் உத்தரவிட்டார்.

முகாமில் புதிதாக 27 பேரின் புகார் மனு பெறப்பட்டது. இந்த புகார் மனு மீது உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு லஷ்மண குமார் உள்பட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story