செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் இமானுவேல்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 193 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடை நம்பி, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story