மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், மகளிர், முதியோர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பட்டா மாற்றம், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 290 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story