மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2023 6:45 PM GMT (Updated: 7 Feb 2023 9:42 AM GMT)

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 217 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். இந்த கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர்சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) லதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story