பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம், ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பகுதிநேர கணினி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பிரதாப். இவர் கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். கடந்த 12-ந் தேதி மதியம் 1 மணியளவில் கரூர்-ஈரோடு சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்தார். தாறுமாறாக காரினை ஓட்டிவந்து விபத்தினை ஏற்படுத்திய ஆசிரியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story