காவல்துறை குடியிருப்புகள் உள்வாடகைக்கு விடப்படுவது தொடர்பான மனு - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி


காவல்துறை குடியிருப்புகள் உள்வாடகைக்கு விடப்படுவது தொடர்பான மனு - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி
x

மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை,

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை உள்வாடைக்கு விட்டு வசூல் செய்து வருவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து மனுதாரர் தனது மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்த நிலையில், வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


Next Story