கூலியை உயர்த்தி வழங்கக்கோரி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு


கூலியை உயர்த்தி வழங்கக்கோரி    கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:45 PM GMT)

கூலியை உயர்த்தி வழங்கக்கோரி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், வடக்கனந்தல், தியாகதுருகம், மணலூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் டெங்கு காய்ச்சல், மலேரியா, யானைக்கால், கொரோனா உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு தினமும் நாள் ஒன்றுக்கு ரூ.289 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை வைத்து குடும்பத்தை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. எங்களைப் போன்று ஊராட்சிகளில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல் எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story