அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும்


அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும்
x

அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க வேண்டும் கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

முத்துகாப்பட்டி ஊராட்சி மேதரமாதேவி கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

முத்துகாப்பட்டி அருகே உள்ள மேதரமாதேவி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் அங்கன்வாடி மையம், 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மேதரமாதேவி கிராமத்தின் மையப்பகுதியில் உள்ளதால், குழந்தைகள் எளிதில் வந்து செல்வதற்கு வாய்ப்பாக உள்ளது.

மேலும் பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்று வருவதற்கு வசதியாக அமைந்து உள்ளது. இந்தநிலையில், இந்த மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வாறு அமையும் இடம் மயானத்துக்கு செல்லும் வழியில் உள்ளதால், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. அதனால் தற்போது செயல்படும் இடத்தில் குழந்தைகள் நலனுக்கான கூடுதல் வசதிகளுடன் புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


Next Story