மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் உதவி ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுரை


மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு காண வேண்டும் உதவி ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுரை
x

முதியோர் ஓய்வூதியம் வழங்கக்கோரும் மனுக்கள் மீது 15 நாளில் தீர்வுகாண உதவி ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

வேலூர்

அணைக்கட்டு

முதியோர் ஓய்வூதியம் வழங்கக்கோரும் மனுக்கள் மீது 15 நாளில் தீர்வுகாண உதவி ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

அணைக்கட்டு தாலுகாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டுமென பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண்பது குறித்து தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் (கலால்) வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தாசில்தார் வினாயகமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார்கள் மெர்லின் ஜோதிகா, திருகுமரேசன் ஆகியோர் வரவேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவில் அரசாணை 540-ன் படி மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பது, இணைய வழி சான்றுகள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி வரும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நிலுவை இன்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அனுப்புவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் வட்ட துணை ஆய்வாளர்கள் வட்ட சார் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story