சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி


சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி
x

விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மாவட்ட அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் கொண்ட புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் மோகன், தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மாவட்ட அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் தியாகங்கள் குறித்து இன்றைய இளையசமுதாயத்தினர் தெரிந்து கொள்ளும் வகையில் தியாகிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் வரலாற்று குறிப்புகள் கொண்ட புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பார்வையிட்டு நமக்காக சுதந்திரம் பெற்றுத்தந்த தலைவர்களின் சிறப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ரகுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story