குழாய் பராமரிப்பு பணி:வடகரை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


குழாய் பராமரிப்பு பணி:வடகரை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 6:46 PM GMT)

குழாய் பராமரிப்பு பணி காரணமாக வடகரை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

தேனி

பெரியகுளம் நகராட்சி வடகரை பகுதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை (திங்கட்கிழமை) மாலை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் 1,2,3,4,5,6,7,8,10 மற்றும் 20 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. வருகிற 8-ந் தேதி வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நகராட்சி மேலாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.


Next Story