பைபர் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது: கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு


பைபர் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது: கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் மீட்பு
x

பைபர் படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், கடலில் தத்தளித்த 2 மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

புதுக்கோட்டை

பைபர் படகு கவிழ்ந்தது

கட்டுமாவடி அருகே செம்பியன் மகாதேவி பட்டினம் கிராமத்தை சேர்ந்த நீலமேகம் (வயது 31), கண்ணதாசன் (30) ஆகியோர் பைபர் படகில் கட்டுமாவடி கடற்கரையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், மூன்று பாகம் ஆழத்தில் நள்ளிரவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பைபர் படகு நடுக்கடலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் பைபர் படகை பிடித்துக் கொண்டு தத்தளித்து, கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.

2 மீனவர்கள் மீட்பு

அப்போது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே ஊரைச்சேர்ந்த திருமுருகன், ரமேஷ் ஆகியோர் மீனவர்கள் 2 பேரையும் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். பிறகு 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இணைந்து 2 படகுகளில் சென்று கவிழ்ந்த பைபர் படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பைபர் படகில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் கடலில் மூழ்கியது. மேலும், படகு என்ஜினும் சேதம் அடைந்தது.


Next Story