நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

கடையநல்லூர், சீதபற்பநல்லூர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

திருநெல்வேலி

கடையநல்லூர், சீதபற்பநல்லூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி, நயினாரகரம், புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வினியோக செயற்பொறியாளர்கள் மாரியப்பன் (கடையநல்லூர்), அலெக்சாண்டர் (நெல்லை கிராமப்புறம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story