கடற்கரை பகுதிகளில் சாகச சுற்றுலா கொண்டுவர திட்டம் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்


கடற்கரை பகுதிகளில் சாகச சுற்றுலா கொண்டுவர திட்டம் - அமைச்சர் மதிவேந்தன் தகவல்
x

கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா கொண்டு வர திட்டமிட்டுட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்த மாமல்லபுரத்தில், அடுத்ததாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் வரும் இன்று முதல் 15-ந்தேதி வரை 3 நாட்களுக்கு 'சர்வதேச பட்டம் விடும் திருவிழா' நடத்தப்படுகிறது. இந்த பட்டம் விடும் திருவிழாவை நக்ர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் அமெரிக்கா, தாய்லாந்து நாடுகளில் இருந்து 4 குழுக்களும், குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 6 குழுக்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவிற்காக மாமல்லபுரம் ஈ.சி.ஆர். சாலை அருகே உள்ள 15 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான மேடைகள், மின்விளக்குகள், வாகனங்கள் செல்ல சாலை வசதிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திருவிழாவில் பார்வையாளர்களுக்கென பிரத்யேக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த விழாவை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.மதிவேந்தன், ஒவ்வொரு வருடமும் இதே போன்று சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா கொண்டு வர திட்டமிட்டுட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story