மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x

மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பூர்

-

தாராபுரம் அரசு மருத்துவமனை சார்பில் பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் 100 வது ஆண்டு நாளை முன்னிட்டு பொன்னாபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆ.தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்ட துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ் 100-ம் ஆண்டு நினைவாக பொன்னாபுரம் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மருத்துவ அலுவலர்கள் ஜெயராஜ், நிவேதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சவுந்தரராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜு, நவீன், சபரிகிரிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Related Tags :
Next Story