ஆழியாறில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


ஆழியாறில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோட்டூர்

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் மற்றும் ஊழியர்கள் ஆழியாறில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

சுமார் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

1 More update

Next Story