காவிரி ஆற்றில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்


காவிரி ஆற்றில் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்
x

காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்தன.

ஈரோடு

ஈரோடு வெண்டிபாளையம் கட்டளை கதவணையில் மின் உற்பத்திக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் திறந்து விடப்படும் பகுதியில் காவிரி ஆறு வறண்டு பாறைகளாக காட்சி அளிக்கிறது.

இந்தநிலையில் பாறைகளின் இடுக்குகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. கட்டளை கதவணையில் மதகுகள் திறந்து விடப்படும்போது ஆற்று தண்ணீரிலேயே இந்த கழிவுகள் அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தண்ணீர் குறைவாக உள்ள போதே காவிரி ஆற்றில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story